இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு, இந்தியா ஆதரவு வழங்காத பட்சத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை மட்டுப்படுத்தி பொருளாதார தடையை ஏற்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டு பிரேரணைகளை முன்வைத்திருந்தது.
இந்த இரண்டு பிரேரணைகளிலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டிருந்த போதும், இந்தியாவின் தலையீட்டினால் இது வெறும் சுயாதீன யோசனையாக மாற்றம் செய்யப்பட்டது.
எனினும் இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வாக்களிப்பதற்கு பிரித்தானியாவும் தகுதி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமற்ற ஒன்றாகியுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் தமது பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க மறுத்தால், இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை செய்ய தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நாளை இந்தியா செல்லும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இந்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக தெரிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


























கயமைக்கார இந்தியா ஈழத் தமிழர்களுக்கு எதிராக திரைமறைவில் தனது கயமைக் கைங்கரியத்தை புரியாமல் இருக்க முடியாது. முடிந்தால் அதன் திரைமறைவு கபட நாடகத்தை வெளிச்சம் போட்டு உலகிற்குக் காட்டவேண்டும். அப்போதுகூட தமிழர் நாட்டு காங்கிரசு ஜடங்கள் சொரனைக் கெட்டு தங்களின் imported from Italy பாரத மாதா துதி பாடிக்கொண்டுதான் இருப்பர்