ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் அமெரிக்க கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவு மந்திரிகள் ஆகியோர் இலங்கை தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
நவிபிள்ளை தனது சமீபத்திய அறிக்கையில்,
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை இலங்கை நிராகரித்தது.
மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.
இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மனித உரிமைகள் தொடர்பான மெத்தன நடவடிக்கைகள், தமிழர் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளில் தாமதம் ஆகியவை காரணமாக 3-வதாக ஒரு தீர்மானம் ஐ.நா. மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் செய்தி தொடர்பாளர் மொஹான் சமரநாயக்க கூறும்போது,
ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீர்மானத்தை சந்திக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.
ஏற்கனவே இதற்கு முந்தைய காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த 2 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது.
இலங்கை அதிபர் ராஜபக்ச கடந்த வாரம் கூறும்போது,
அண்டை நாடான இந்தியாவில் தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால், தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க கூடும் என்றார்.
மியான்மரில் நடைபெற இருக்கும் வங்க கடல் நாடுகள் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜபக்ச புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
கடந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டை மன்மோகன் சிங் புறக்கணித்த பின்னர் இப்போது முதல்முறையாக ராஜபக்சேவை சந்தித்து பேச இருக்கிறார்.
7 உறுப்பு நாடுகளை கொண்ட பிம்ஸ்டெக்கில் இந்தியா மட்டுமே ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


























அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்தின் நகல் வெளியானது:தொலைந்து போன மேலும் ஒருவருடம்
UN_Human_Rights Councilஇலங்கை இனக்கொலையாளிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியும் தீர்மானத்தின் நகல் வெளியாகியுள்ளது. முன்னைய தீர்மானங்களிலிருந்து புதிய தீர்மானம் பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பை நிரகரித்து அதனை மனித உரிமைப் பிரச்சனையாகச் சுருக்கும் தீர்மானம் மனித் உரிமைகள் தொடர்பான பல கண்டனங்களை இலங்கை அரசிற்கு எதிராகாத் தெரிவித்த அதே வேளை, இறுதியில் இனக்கொலையின் சூத்திரதாரிகளையே விசார்ணை நடத்துமாறு கோருகிறது.
அபிவிருத்தி, வட- மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை போன்ற விடயங்களில் இலங்கை அரசைப் பாராட்டும் தீர்மானம் மனித உரிமை ஆணையாளருடன் ஒத்துழைத்தமைக்கும்பாராட்டுத் தெரிவிக்கிறது. தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் கோருகிறது.
இலங்கை அரசை தொடர்ச்சியாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
வருடம் ஒருமுறை நடத்தப்படும் தீர்மானத் திருவிழா மக்களுக்குப் போலி நம்பிக்கையை வழங்கி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முனெடுப்பதற்கான அரசியலைப் பிந்தள்ளுகிறது.
இலங்கையில் நாளுக்கு நாள் அரசியல், சமூகக், கலாச்சரத் தளங்களில் நேரடியாகவும் அழிக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் போராட்டத்தை நோக்கி அணிதிரட்டபடுவதைத் தவிர்க்க தமிழத்தின் தமிழ் இனவாதிகளும் புலம் பெயர் பிழைப்பு வாதிகளும் செயற்படு ஈழத்தில் மக்களைப் பார்வையாளர்களாக்க உலகம் முழுவதும் அவர்களுக்குச் சார்பாகத் திரும்பியுள்ளது, தமிழ் நாடு அவர்களுக்குச் சார்பானதாக் உள்ளது, பிரபாகரன் மீண்டு வருவார் போன்ற பல்வேறு மாயைகள் கட்டமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக அணிதிரள்வதைத் தவிர்க்கப் பயன்படும் போலி முழக்கங்களாகும்.
சீனாவின் தயவு இருக்கின்ற துணிச்சல். சீனா ரஷ்ய போன்ற நாடுகள் பற்றி சொல்ல தேவை இல்லை
ஆனால் பக்கத்தில் இருக்கும் துரோகி தமிழன்கள் -ஒன்றுக்கும் உதவாத மட ஜென்மங்கள். இன பற்று மொழிப்பற்று இல்லா பிண்டங்கள்.
அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயார் ,நாடு நாடாக ஓடும் அவசியமென்ன ,சர்வாதிகாரம் ,ஜனநாயகத்தை பார்த்து கேளிபேசுகின்றது ,ஜனநாயகமே விழித்துகொள்,சர்வதேசத்தின் சுயநலங்களால் ,சர்வாதிகாரத்தை சுமந்தவன் எக்காளம் இடுகிறான் ,ஜனநாயகம் நோக்கி ,நீதி தேவதையின் கண்கள் இதற்காகத்தான் கட்டபட்டுள்ளதோ ,இதயம் உள்ளோரே கூறுங்கள் ,இதயம் உள்ளோரை நோக்கி நகர்வோம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நாம் , மாறுவோம் ,மாற்றுவோம் .