இந்தியா – சீனாக்கிடையே போர்? ஐ.நா.எச்சரிக்கை!

un-logo1ஆசிய நாடுகளில் வானிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் போர் மூளும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குடிநீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கால நிலை மாற்றத்தின் காரணமாக, ஆசிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் குறையும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய மோசமான நிலை ஏற்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.