ரபிஸிக்கும் மலேசியாகினிக்கும் எதிரான என்எப்சி வழக்கு விசாரணைக்குச் செல்கிறது

nfcநேசனல்  ஃபீட்லோட்  கார்பரேஷன்  சென். பெர்ஹாட்(என்எப்சி), பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லிக்கு  எதிராகவும்  மலேசியாகினிக்கு  எதிராகவும்  கொண்டுவந்துள்ள  அவதூறு  வழக்கு  கோலாலலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  விசாரணைக்குச்  செல்லும்.

இன்று  சம்பந்தப்பட்ட  தரப்புகள்  ஒரு  சமரச  உடன்பாட்டுக்கு  வரத்  தவறியதை  அடுத்து  இந்நிலை  ஏற்பட்டுள்ளது.

இனி, அவ்வழக்கு  விசாரணைக்கான  நாளை  நீதிபதி  ஜோன்  லூயிஸ்  ஓ’ஹாரா முடிவு  செய்வார்.

இத்தகவலை  என்எப்சி  வழக்குரைஞர்  ஒய். சீலன்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“இனி, இவ்விவகாரத்தில்  சமரசத்துக்கு  இடமில்லை. சமரச  முயற்சிகள்  பயனளிக்கவில்லை”,  என்றாரவர்.