ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி: ஏற்பாட்டாளர்களின் பதிலுக்கு போலீஸ் காத்திருக்கிறது

anti gstமே  முதல்  நாள்  நடத்தத்  திட்டமிட்டுள்ள  பொருள்,  சேவை  வரிக்கு  எதிரான  பேரணி  தொடர்பில்  அதன்  ஏற்பாட்டாளர்கள்  இன்னும்  பதில்  சொல்லாதிருக்கிறார்கள்  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறியுள்ளார்.

அப்பேரணியை  கேஎல்சிசி-இல் தொடங்கி  டாட்டாரான்  மெர்டேகாவில்  முடிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால்,  டாட்டாரான்  மெர்டேகாவைப்  பயன்படுத்த  முடியாது.  அது  செப்பனிடப்படுவதாக  ஏற்பாட்டாளர்களிடம்  ஏப்ரல்  16-ஆம்  தேதி  நடந்த  பேச்சுகளின்போது  தெரிவிக்கப்பட்டதாக  காலிட்  கூறினார்.

“அவர்களின்  பதிலுக்காகக்  காத்திருக்கிறோம். அவர்களின்  ஒத்துழைப்பை  எதிர்பார்க்கிறோம்”,  என்று  காலிட்  இன்று  புத்ரா ஜெயாவில்  கூறினார்.