மகாதிர்: சீனர்கள் பணக்காரர்களாகவும் இந்தியர்கள் வழக்குரைஞர்களாகவும் உள்ளனர்

mahஅமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமாவின்  கூற்றை  மறுத்த  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசியாவில்  சீனர்களும்  இந்தியர்களும்  செல்வச்  செழிப்புடன்  வாழ்வதாகக்  கூறினார்.

“மலேசியாவில், எங்களின்  கொள்கைகள்  எப்படி  இருப்பினும்,  எங்காவது  சீன  ஏழைகளைப்  பார்க்கிறீர்களா? இந்தியர்கள்  மருத்துவர்களாக, வழக்குரைஞர்களாக  இருக்கிறார்கள்”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

முஸ்லிம்-அல்லாதாருக்குச்  சமவாய்ப்புகள்  கொடுக்கப்படவில்லை  என்றால்  மலேசியாவால்  வெற்றிபெற்ற  நாடாக  முடியாது  என  ஒபாமா  கூறிச்சென்றது  சில  வட்டாரங்களைக்  கொதிப்படைய  வைத்துள்ளது.