குளுகோரில் போட்டியிடுவது பற்றி மசீச இன்னும் முடிவு செய்யவில்லை

weeபுக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் போட்டியிடுவது  பற்றி  மசீச  இன்னும்  முடிவுக்கு வரவில்லை  என்பதை  அதன்  துணைத்  தலைவர்  வீ கா  சியோங் தெளிவுபடுத்தியுள்ளார்.

“நேற்று  கட்சி  போட்டியிடுவது பற்றி  மனம்விட்டுப்  பேசினோம். போட்டியிடுவதை  ஆதரித்தும்  எதிர்த்தும் பல்வேறுபட்ட  கருத்துகள்  தெரிவிக்கப்பட்டன”, என்றாரவர்.

இறுதி  முடிவைக் கட்சித்  தலைவரும், பிரதமரும்  பிஎன்  தலைவருமான  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  செய்வார்கள்  என  வீ  கூறினார்.