மாட் சாபு: அன்வார் பேசும் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்

mat sabuஇன்றைய  ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியை  ஏற்பாடு  செய்தவர்களில்  ஒருவரான  பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  பேரணி  முடியும்வரை  மக்கள்  கலைந்துபோகக்கூடாது  என்று  கேட்டுக்கொண்டார்.

“நிகழ்வு  முடிவதற்குமுன்  போய்  விடாதீர்கள்…..அன்வார்  இப்ராகிம்  பேசும்வரை  காத்திருங்கள். இதுவே  அவர்  பேசுவதைக்  கேட்கும் கடைசி  வாய்ப்பாகவும்  இருக்கலாம்”.

மழையைப்  பற்றிக்  கவலை  வேண்டாம்  என்றார். “ஒரே  வேக்காடாக  இருக்கிறது. மழை  வந்தால்  குளுகுளுவென்றிருக்கும்”, என்றும்  கிண்டலடித்தார்.