சாபாவில் மற்றுமொரு சீன நாட்டவர் கடத்தல்

sabahசாபா,  லாஹாட்  டத்து  சீலமில், ஒரு  மீன்வளர்ப்புப்  பண்ணையிலிருந்து  சீன  நாட்டுக்  குடிமகன்  ஒருவர் கடத்தப்பட்டதாக  நம்பப்படுகிறது.

தஞ்சோங்  லபியானுக்கு  அப்பால்  உள்ள  கடல்பகுதியில் கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடம்  கொள்ளையிட்ட  24-மணி  நேரத்தில் இக்கடத்தல்  சம்பவம்  நிகழ்ந்ததாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.

அந்தச்  சீன  நாட்டவரின்  பெயர்  யாங்  சைலின்  என்றும் வொண்டர்புல்  டெரேஸ்  நிறுவனத்தின்  மேலாளரான  அவரை  அதிகாலை  2.45க்கு  துப்பாக்கிக்காரர்கள் கடத்திச்  சென்றனர்  என்றும்  அதிகாரப்பூர்வமற்ற   வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  த  ஸ்டார்  கூறியது.

துப்பாக்கிக்காரகள்  தென்  பிலிப்பின்சை  நோக்கித்  தப்பி  ஒடியதாக தெரிகிறது.