சிலாங்கூரில் பிகேஆர் தேர்தல் தாமதப்படுத்தப்படுவது அஸ்மினைத் தோற்கடிக்கும் முயற்சியா?

azminசிலாங்கூரில்  கட்சித்  தேர்தலின்போது  நிகழ்ந்த  ரகளையால்  வாக்களிப்பு  இரத்துச்  செய்யப்பட்டது எதிர்பார்க்கப்பட்டதுதான்  என்று  கூறிய  பிகேஆர்  நடப்புத்  துணைத்  தலவர்  முகம்மட்  அஸ்மின்  அலி,  அதிகாரப்பூர்வ  விளக்கத்துக்காகக்  காத்திருப்பதாகத்  தெரிவித்தார்.

அவர்  அது  பற்றி  மேலும்  விவரிக்கவில்லை. ஆனால்,   கட்சி  வட்டாரங்கள்  சில,  அஸ்மின்  திரும்பவும்  தேர்ந்தெடுக்கப்படுவதைத்  தடுக்கும்   ஒரு முயற்சி  சிலாங்கூரில்  நடப்பதாகத்  தெரிவித்தன.

நேற்று சிலாங்கூரில்  13  தொகுதிகளில்  சர்ச்சைகள்  மூண்டதால்   வாக்களிப்பு  இரத்துச்  செய்யப்பட்டது.

இதுவரை  எண்ணப்பட்ட  வாக்குகளில்,  தம்மை  எதிர்த்துப்  போட்டியிடும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  ஆகிய  இருவரையும்விட  அஸ்மினுக்குக்  கூடுதல்  வாக்குகள்  கிடைத்திருப்பதாக  தெரிகிறது.