நவநீதம்பிள்ளை, ஜெயலலிதா ஆகியோரும் புலிகளின் கைப்பொம்மைகளே என்கிறார் உதய கம்மன்பில

jeya-navipillaiபுலி­களை கொன்­ற­மைக்கு பழி தீர்க்­கவே நவ­நீ­தம்­பிள்ளை அவ­ச­ரப்­ப­டு­கின்றார். நவ­நீ­தம்­பிள்ளை முதற்­கொண்டு ஜெய­ல­லிதா வரை­யிலும் இலங்­கையில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் அனை­வரும் பு­லி­க­ளினால் வழி­ந­டத்­தப்­பட்டு வரு­ப­வர்­களின் கைப்­பொம்­மைகள். என்று ஜாதிக ஹெல உறு­மய கட்­சி உறுப்பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

இலங்கை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யினை நடத்த ஐ.நா. ஆணை­யாளர் நவநீதம்­பிள்ளை தீவிரம் காட்­டு­வது தொடர்பில் வினவி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் போர்க்­கால சூழலில் சர்­வ­தேச நாடு­களின் ஆத­ரவும் உத­வி­களும் எமக்குக் கிடைத்­தது. அப்­போது சர்­வ­தே­சத்­திற்கு விடு­த­லைப்­ பு­லிகள் அமைப்பு பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே தெரிந்­தனர். அனைத்து நாடு­க­ளிலும் தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லி­களை தடை செய்­யப்­பட்ட இயக்­க­மா­கவும் சர்­வ­தேச அளவில் தேடப்­படும் இயக்­க­மா­கவும் காணப்­பட்­டது. எனினும், யுத்­தத்தின் பின்னர் விடு­த­லைப் ­பு­லிகள் இயக்கம் நல்­ல­தொரு இயக்­க­மா­கவும் அவர்­களின் ஆயு­தப் ­போ­ராட்டம் நியா­ய­மான ஒன்­றெ­னவும் வலி­யு­றுத்த ஆரம்­பித்­து ­விட்­டனர்.

இன்று இலங்­கைக்கு எதி­ராக விசா­ர­ணை­யினை கொண்­டு­வர முயற்­சிக்கும் அனை­வரும் விடு­த­லைப் ­பு­லிகள் இயக்­கத்தின் ஆத­ர­வா­ளர்­க­ளென்­பது உண்மை. நவ­நீ­தம்­பிள்ளை முதற்­கொண்டு ஜெய­ல­லிதா வரை­யிலும் இலங்­கையில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் அனை­வரும் விடு­த­லைப்­ பு­லி­க­ளினால் வழி­ந­டத்­தப்­பட்டு வரு­ப­வர்­களின் கைப்­பொம்­மைகள். தீவி­ர­வா­தி­களின் கறுப்­புப்­பணம் இவர்­க­ளிடம் குவி­கின்­றதன் கார­ணத்­தி­னா­லேயே தமிழர் பிரச்­சினை எனும் பெயரில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

கொல்­லப்­பட்ட தமி­ழீழ விடு­தலைப் புலி­களை பொது­மக்கள் என பொய்­யான அறிக்­கை­யினைத் தயா­ரித்து நாட்­டையும் சிங்­கள மக்­க­ளையும் பழி­வாங்கும் நோக்­கத்­தி­லேயே மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை வேக­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார்.

இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று இடம்­பெற்று இறு­தியில் மீண்­டு­மொரு ஆயு­த­ப்போ­ராட்டம் ஏற்­படும் நிலை­மையை உரு­வாக்க முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அதில் சர்­வ­தேசம் வெற்றி காண ஒரு­போதும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

மேலும், இலங்­கையில் தமிழ் மக்­களை துரும்புச் சீட்­டாகப் பயன்­ப­டுத்தி சர்­வ­தேச நாடு­க­ளிடம் பொய்­யான கருத்­து­களைப் பரப்பி, அறிக்­கை­யினை சமர்ப்­பித்து இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச குழு­வொன்­றினை அமைக்கும் முயற்­சி­யினை தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேற்­கத்­தேய நாடுகள் – இந்­தியா மற்றும் தென்­னா­பி­ரிக்­காவின் பலமும் உத­வியும் தமக்­குள்­ள­தென்ற நம்­பிக்­கையில் கூட்­ட­மைப்­பினர் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­தி­யத்­ தேர்­தலில் ஆட்சி மாற்றம், ஜெய­ல­லி­தாவின் பெரும்­பான்மை வெற்றி என்­பன ஒரு­போதும் கூட்­ட­மைப்­பிற்கு சாத­கமாக அமையப் போவ­தில்லை. பகற் கன­வினைக் கண்டு கூட்­ட­மைப்­பினர் காலத்தைக் கடத்­து­வதும் வடக்கில் பிரி­வி­னை­யி­னை தூண்­டும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வதும் வெகு விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்­படும் எனவும் அவர் தெரிவித்தார்.

TAGS: