மலேசியாவில் தாய்லாந்து எண்ணெய் கப்பல் கடத்தல்?

thai_ship_001சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி தாய்லாந்து நாட்டு எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

14 சிப்பந்திகளுடன் பயணித்த  ‘எம்.டி. ஆரபின்–4‘  என்ற கப்பலே காணாமல் போயுள்ளது.

சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றதை தொடர்ந்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து விட்டது. இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது. அதில் இருந்த மூன்று மில்லியன் லீட்டர் எரிபொருள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -LankaSri-World