திருமண பந்தத்தில் இணைந்த சகோதரங்கள் – பிரிந்து வைத்தது சவுதி நீதிமன்றம்

saudi_couple_001மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டும், வளர்ப்புத் தாய் முறைமை காணப்படுகிறது.

வளர்ப்புத் தாயாக செயற்படுவர்களுக்கு பெருந் தொகை சம்பளமும் வழங்கப்படுகிறது.

அத்துடன் தனக்கு பாலூட்டி, வளர்த்த பெண்ணை சொந்தத் தாயாகவே பிள்ளைகள் கருதுவதும், தன்னிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளை தம் சொந்த மக்களாக அந்த பெண்கள் கருதுவதும் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபு வழி பழக்கமாக உள்ளது.

இந்நிலையில், சவுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் சுமார் 25 ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் மூலம் 7 குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு பெரிய உண்மை தெரிய வந்தது.

தற்போது, கணவன்-மனைவியாக வாழ்ந்து வரும் இவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தில் ஒரே வளர்ப்புத் தாயிடம் பால் குடித்து வளர்ந்துள்ளனர் என்பது வயதில் மூத்த ஒரு குடும்ப உறவினரின் மூலம் தெரிய வந்தது.

அரபு நாட்டு சட்டதிட்டங்களின்படி, ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதர- சகோதரிகளிடையே நடக்கும் திருமணங்கள் மற்றும் தகாத உறவு போன்றவை பாவச் செயலாக கருதப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தம்பதியர் விவகாரம் குறித்த வழக்கு நடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது.  இந்த பிரச்சனையில் சட்ட தீர்வை காண முடியாத சவுதி நீதிமன்றம், ஒரே பெண்ணிடம் தாய்ப்பால் அருந்தி வளர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாமா? என்பது தொடர்பாக இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களில் நிபுனத்துவம் பெற்ற சவுதியின் மூத்த ‘முஃப்தி’ ஷெய்க் அப்துல அஜிஸ் அல்-ஷெய்க்-கின் ஆலோசனையை கேட்டது.

சிக்கலான இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கிய முப்தி, தம்பதியர் இருவரையும் விவாகரத்தின் மூலம் பிரித்து வைக்க ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்து வைத்த நீதிமன்றம், இனி பிரிந்து வாழும்படியும் உத்தரவிட்டுள்ளது. -LankaSri-World