கராச்சி குண்டுவெடிப்பிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இராணுவம்

military_attacks_talibans_001பாகிஸ்தான் இராணுவம் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தை தாக்கிய தலீபான் தீவிரவாதிகளின் செயல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாட்டின் வடக்கு மாகாணமான கைபர் பழங்குடி மாகாணத்தில் உள்ள தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் விமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த விமான தாக்குதலில் 7 மறைவிடங்கள் அழிக்கப்பட்டதுடன், 15 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் கராச்சி விமான நிலைய தாக்குதலை நடத்திய தலீபான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.