மோடியுடன் பேச்சு நடத்தி சர்வதேச விசாரணையை வலியுறுத்த தமிழ் கூட்டமைப்பு முயற்சி!- சம்பிக்க ஆருடம்

sampanthan-modiமோடி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ர­ணை­யை வலி­யு­றுத்­தவே தமிழ் தேசியக் கூட்­டமைப்பு முயற்­சிக்­கின்­றது என குற்றம் சுமத்தும் அர­சாங்க பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய
மோடியுடன் ஐநா விசா­ர­ணைக்­கு­ழுவை தடுப்­பதில் அர­சாங்­கத்­திற்கு துணை­யாக செயற்­ப­டுவோம் எனவும் தெரி­வித்­தது.

மோடி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­திப்பார் என்ற செய்தி வெளி­யா­கி­யுள்ள நிலையில் அது தொடர்­பிலும் ஐ.நா. விசா­ரணைக் குழு­விற்கு அனு­மதி இல்லை என்ற அர­சாங்­கத்தின் கருத்து தொடர்­பிலும் வின­விய போதே ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச சக்­திகள் செயற்­பட்டுக் கொண்­டுள்ள நிலையில் இந்த சந்­தர்ப்­பத்­தினை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பயன்­ப­டுத்தி நாட்டை அழிக்கும் முயற்­சி­க­ளையே தொடர்ச்­சி­யாக செய்து வரு­கின்­றது.

கடந்த காலங்­க­ளிலும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் மாநாட்டு காலத்­திலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அனைத்து உறுப்­பி­னர்­களும் சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னேயே பேச்­சு­வார்த்தை நடத்திக் கொண்­டி­ருந்­தனர்.

இப்­போதும் நாட்­டிற்கு எதி­ரான பல சதித் திட்­டங்­களை கூட்­ட­மைப்பு செய்து கொண்டே இருக்­கின்­றது.

இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர ­மோ­டி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்தை நடத்­து­வது இது­வ­ரையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை என நினைக்­கின்றேன்.

எனினும் கூட்­ட­மைப்­பினர் அவ்­வா­றான முயற்­சி­களை எடுப்­பது இந்­தி­யாவை தம்­வ­சப்­ப­டுத்தி இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றினை வலி­யு­றுத்தும் முயற்­சி­யி­லேயே. இது அனை­வரும் புரிந்து கொள்ளக் கூடிய விட­யமே.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமையும் என்­பதை அனை­வரும் நன்­றாக புரிந்து கொண்­டுள்­ளனர். எனவே இதில் ஆச்­ச­ரி­யப்­படும் அளவில் ஒன்றும் இல்லை.

மேலும், ஐ.நா. விசா­ரணைக் குழுவின் செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ரவு வழங்கப் போவ­தில்லை எனவும் விசா­ரணைக் குழு­விற்கு விசா வழங்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் அர­சாங்கம் குறிப்­பிட்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்க விட­யமே.

இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்­றினை தடுக்க விசாரணைக் குழுவின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு துணையாகவே செயற்படுவோம்.

அதேபோல் நாட்டிற்குள் செயற்படும் தேசத்துரோகிகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

TAGS: