முகைதின்: இன்னொரு ‘மே 13’? சாத்தியமில்லை என்று சொல்வதற்கில்லை

mayஇன்று  இனங்களுக்கிடையில்  பதற்றநிலை  அதிகரித்து வருவதைப்  பார்க்கையில்  “அதுபோன்ற  சம்பவம்” மீண்டும்  நிகழ்வதற்கு  வாய்ப்பில்லை  என்று  கூறிவிட  முடியாது  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியுள்ளார். மே 13-ஐ மனத்தில்  வைத்தே  அவர்  இவ்வாறு  கூறியுள்ளார்.

ஓர்  இனம்  இன்னோர்  இனத்தைக்  குற்றம்சொல்வது  இப்போது  சாதாரணமாகி  விட்டது  என்று  முகைதின்  குறிப்பிட்டதாக  உத்துசான்  மலேசியா  கூறியது.

இனங்களுக்கிடையிலான உறவு  மோசமடைந்து பல்வேறு  அனுமானங்களுக்கு  இடமளித்துள்ளது  என்றாரவர்.

“இதனால் அப்படியொரு  சம்பவம்( அதை  என் வாயால் சொல்ல  விரும்பவில்லை)  நிகழலாம்”, என்றவர்  கூறியதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்தது.

“ஏன் இப்படியெல்லாம்  நடக்கிறது,  நினைக்கவே  வருத்தமாக  உள்ளது. நாம்  சரியான  பாதைக்குத்  திரும்ப  வேண்டும்”, என்று  முகைதின்  கூறினார்.