பிச்சைக்காரர் விவகாரம்: பெர்காசாவும் தெங்கு அட்னானைச் சாடியது

perகோலாலும்பூர்  மாநகர்  மையத்தின்  இரண்டு  கிலோமீட்டர்  சுற்றுவட்டத்தில்  பிச்சை  எடுப்பதையும்  இடுவதையும்  தடைசெய்யும்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரின்  திட்டத்தைக்  குறைசொல்வோரின்  வரிசையில்  பெர்காசாவும்  சேர்ந்து  கொண்டிருக்கிறது.

“ரமலான்  மாதத்தில்  பலர்  பிச்சை  இட  விரும்பும்  நேரத்தில் அமைச்சர் மடத்தனமான,  அறிவுக்கு  ஒவ்வாத  திட்டத்தை  அறிவித்துள்ளார்”, என பெர்காசா  இளைஞர்  பகுதி  தலைவர்  இர்வான்  பாஃமி  டெரிஸ்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.