தமிழ் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவரும் அரசாங்கம்

tna_govtதேசியப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தின் உயர்­மட்டம் தீர்­மா­னித்­துள்­ள­தாக நம்­ப­க­ர­மாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அர­சியல் தீர்­வுக்­கான இணக்­கப்­பாட்டை எட்­டிக்­கொள்­வ­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெற முடி­யாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு திட்­ட­வட்­ட­மாகக் கூறி­வ­ரு­கின்ற நிலையில், அர­சாங்கம் இவ்­வா­றான தீர்­மா­னத்­துக்கு வந்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார்.

அந்­த­வ­கையில் விரைவில் அரச தரப்­பி­லி­ருந்து நேரடிப் பேச்­சுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்த தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போஷா இரண்டு தரப்­பு­டனும் நட­த­திய பேச்­சு­வார்த்­தையின் பின்னர் அர­சாங்க மட்­டத்தில் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்சை நடத்­து­வது குறித்து தீவி­ர­மாக ஆராய்ந்­து ­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சாங்­கத்­துடன் நேரடிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­ப­தற்கும் தீர்வு ஒன்றை நோக்கி செல்­வ­தற்கும் கூட்­ட­மைப்பு அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தா­கவும் தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போ­ஷா­விடம் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ச­வு­ட­னான சந்­திப்­பின்­போது கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்கு தயாரா என்று சிறில் ரம­போஷா வின­வி­யி­ருந்தார். இது குறித்து சிந்­திக்­க­ வேண்­டி­யுள்­ள­தாக அதன்­போது ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். இந்த நிலை­யி­லேயே கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை நடத்­து­வது குறித்து அர­சாங்கம் ஆராய்ந்­து­ வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் கடந்த 2011ம் ஆண்­டி­லி­ருந்து இடம்­பெற்­று­வந்த இரு­த­ரப்பு பேச்­சுக்கள் 2012ம் ஆண்டு ஜன­வரி மாதத்­துடன் முறி­வ­டைந்­தது.

இந்­நி­லையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்த அர­சாங்கம் கூட்­ட­மைப்பு தெரி­வுக்­கு­ழு­வுக்கு வந்­தால்தான் தீர்வு சாத்­தியம் என்று கூறி­வந்­தது.

இந்­நி­லையில் தற்­போது சர்­வ­தேச ரீதி­யான அழுத்­தங்கள் அதி­க­ரித்­துள்ள நிலையில் தீர்வை நோக்கி செல்­வ­தற்­கான செயற்­பாட்டை ஆரம்­பிக்க கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சுக்­களை ஆரம்­பிப்­பது குறித்து ஆளும் கட்சி பரி­சீ­லித்­து­வ­ரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்­த­வாரம் இந்­தி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜை சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இந்த சந்­திப்­பின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு அழைத்­து­வர உத­வு­மாறு அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் நேரடிப் பேச்சு விவ­காரம் குறித்து ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜ­பக்சவிடம் வின­வி­ய­ போது பதி­ல­ளித்த அவர் கூட்­ட­மைப்­புடன் தீர்வு விடயம் தொடர்பில் இரு­த­ரப்பு பேச்­சுக்கு முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் தற்­போது இல்லை. சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுடன் இந்த விட­யத்தை அணு­கு­வ­தற்கு தயார் என்ற விட­யத்தை உறு­தி­ப­டுத்­தினார்.

அமைச்சர் பசில் ராஜ­பக்ச இந்த விடயம் குறித்து தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,

அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் தற்­போது பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு வர முடி­யாது என்று கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக கூறி­வந்தால் வேறு ஒரு புதிய வேலைத்­திட்­டத்­துக்கு செல்­வது குறித்தும் ஆராய்­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது.

TAGS: