உலக நாடுகளை உளவு பார்க்கும் அமெரிக்கா செயற்கைகோள்

us_satellites_001சீனா மற்றும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து ‘டெல்டா 4‘ என்னும் ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

63 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டை யுனைட்டட் ஏலியன்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் லாக்கீட் அண்ட் போயிங் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இதனைத் தயாரித்து இருந்தது. இதில் சக்தி வாய்ந்த ஒரு ஜோடி செயற்கை கோள்களும் பொருத்தப்பட்டு இருந்தன.

இந்த செயற்கைகோளை மற்ற நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்வெளிக்கலங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் துல்லியமாக உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டின் பல்துறை வளர்ச்சியாக செய்கைகோளை விண்ணில் ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.