போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது: இஸ்ரேல்

gazaaகாசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என அது எச்சரித்துள்ளது.

இன்று முன்னதாக 72 மணி நேர போர்நிறுத்தம் காசாவில் அமலுக்கு வந்திருந்தது. மோதலில் ஈடுபடும் இஸ்ரேலிய இராணுவமும் ஹமாஸும் தமது படைகள் தாக்குதலில் ஈடுபடுவதை நிறுத்திவைத்திருந்தனர்.

ஆனாலும் காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் உள்ள சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடக்கவே செய்ய்ம் என இஸ்ரேல் கூறியிருந்தது.

ஆனால் ஹமாஸ்தான் இந்த போர்நிறுத்தத்தை முதலில் மீறியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால் இந்த போர்நிறுத்தம் மிகவும் பலவீனமானது என்பது ஏற்கனவே நிரூபனமாகியிருந்தது, ஏனென்றால் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலில் பாலஸ்தீனர்கள் நால்வர் கொல்லப்பட்டிருந்தும் பலர் காயமடைந்தும் இருந்தனர்.

போர்நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பாக இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 14 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

நேற்று பாலஸ்தீன ஆயுததாரிகள் வீசிய மோர்டார் குண்டில் சிக்கி இஸ்ரேலிய சிப்பாய்கள் 5 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

சென்ற மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்திருந்த இந்த மோதல்களில் சிவிலியன்கள் பெரும்பான்மையாக இதுவரை 1400க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய தரப்பில் 63 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. -BBC

ராணுவ வீரரை திருப்பி தராவிட்டால் காஸா பகுதியை தரை மட்டம் ஆக்குவோம்: இஸ்ரேல் பகிரங்க மிரட்டல் !

இஸ்ரேல் பாலஸ்தீன் எல்லைப்புறமான காஸாவில் பல நாட்களாக யுத்தம் மூண்டுள்ள விடையம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நேற்றைய தினம்(01) இஸ்ரேலியப் படையின காஸாவின் கிழக்கு பக்கமாக ராணுவ நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். இந்தவேளை பார்த்து, பலஸ்தீன விடுதலை அமைப்புகளில் ஒன்றான ஹமாஸ் இஸ்ரேல் படை வீரர் ஒருவரை கடத்திச் சென்று விட்டார்கள். பல பயிற்சிகளை எடுத்த இஸ்ரேலின் அதிரடிப்படையினரே காஸா பாகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்வதே கஷ்டமான விடையம். ஆனால் அவர்களில் ஒருவரை படு சாமர்த்தியமாக ஹமாஸ் இயக்கம் கடத்திச் சென்றுவிட்டது

இது எப்படி நடந்தது என்று அனைவரும் மூக்கு மேல் விரலை வைக்கிறார்கள். ஆனால் இஸ்ரேல் கடும் ஆத்திரமடைந்துள்ளது. கடத்தப்பட்ட வீரரை திரும்பத் தரவில்லை என்றால், காஸா பகுதியை தரை மட்டமாக தான் நீங்கள் பார்பீர்கள் என்று அன் நாடு பகிரங்கமகவே கூறியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலை தோன்றியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தை பொறுத்தவரை அவர்கள் அக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்க மாட்டார்கள். இன்னும் பாரிய போர் மூழும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.