தெற்கில் தமிழ் மாணவன் தாக்குதலை யாழ் பல்கலை கண்டனம்!

timthumbசிறீலங்காவின் தெற்கில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டடிருந்தார். அத்துடன் குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற 10 பேருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன் பல்கலை வளாகத்துக்குள் தமிழ் மாணவர்களை விடுதலைப் புலிகள் என சித்தரித்தும் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கும் தமிழ் மாணவர்கள் மீது விடுதலைப்புலிகள் இயக்க சாயம் பூசுவதற்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது

TAGS: