ஜாஹிட்: மகாதிர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மதிக்க வேண்டும்

respectஎல்லாரையும்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகமட்டும்  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்களை  மதிக்க  வேண்டும்  என்று   உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்  பிரதமர்  நஜிப்புக்கு  விசுவாசம்  காட்டிட  வேண்டும் என்றவர்  குறிப்பிட்டார்.

“மகாதிர் பிரதமராக  இருந்தபோது  எல்லாரும்  அவருக்கு  விசுவாசமாக  இருக்க  வேண்டும்  என்று  வலியுறுத்துவார். அதேபோலத்தான்  நஜிப்பும்  எல்லாரும்  விசுவாசமாக  இருப்பதை  எதிர்பார்ப்பார்”, என்றாரவர்.

அம்னோவில்  சில  தரப்பினர்  நஜிப்பைக் கவிழ்க்கப்  பார்ப்பதாகக் கூறப்படுவதையும்  ஜாஹிட்  மறுத்தார்.