ஹிஷாம்: ஒபாமாவும் புடினும் செய்ய முடியாததை நஜிப் செய்தார்

hishamபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தற்காத்துப்  பேசியுள்ள  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன், அமெரிக்க   அதிபர்  பராக்  ஒபாமாவும்  ரஷ்ய  அதிபர்  விளாடிமிர்  புடினும்  செய்ய  முடியாததை  நஜிப்  செய்திருக்கிறார்  என்றார்.

எம்எச் 17 விமானம்  விழுந்து  நொறுங்கிய  சம்பவத்தை  நஜிப்  கையாண்ட விதமும்,  இறந்துபோனவர்களின்  சடலங்களை  நாட்டுக்குத் திரும்பக்  கொண்டுவர   பிரிவினைவாத  படையினருடன்  அவர்  பேச்சு  நடத்திய  முறையும்  அவர்  “துணிச்சல்மிக்க  தலைவர்”  என்பதைக்  காண்பிப்பதாக  ஹிஷாமுடின்  கூறினார்.

“நஜிப்  பிரிவினைவாதிகளை  நேருக்கு  நேர்  சந்திக்கும்  துணிச்சலான  முடிவை  எடுக்காதிருந்தால், இன்று (மலேசியர்களின்) உடல்களை  வரவேற்க  இங்கு  நான்  நின்று  கொண்டிருக்க  மாட்டேன்.

“அதை  ஒபாமாவால்  செய்ய  முடிந்ததா, புடினால்  செய்ய  முடிந்ததா”, என்று  செய்தியாளர்களை  நோக்கி  வினவினார்  ஹிஷாமுடின்.