தமிழக முதல்வரை விரைவில் சந்திப்போம்!- டில்லியில் நிருபரிடம் கூட்டமைப்பினர்

tna_members_003இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  எம்.பிக்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்றைய தினம் டில்லியில்  நிருபரிடம் அவர்கள் கூறுகையில்,

இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்த முறை இந்தியா வரும்போது சென்னையில் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கைக்கு நெருக்குதல்  கொடுக்க வேண்டும் என்றனர்.

TAGS: