தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் தீர்வே தேவை- இந்தியா

0tna_india_sushmaஇலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றுக்கொடுக்கும் அரசியல் தீர்வு ஒன்று தேவை என்று இந்தியா அறிவித்துள்ளது

இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் சயீட் அக்பருடீன் இதனை இன்று இதனை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்

ஐக்கிய இலங்கைக்குள் சமஅந்தஸ்து சமஉரிமைää மற்றும் இறைமை நீதியான தீர்வு ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு அவசியம் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அந்த நாட்டின் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு அங்கமாகவே இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக அக்பருதீன் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் 13வது அரசியல் அமைப்பை அடிப்படையாகக்கொண்டு இந்தியா தமது முனைப்புக்களை மேற்கொள்வதாக அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்

தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்!- சுஷ்மாவிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என  வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள், டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, 13வது அரசியல் சட்ட திருத்தம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழர் பகுதியில் தொடர்ந்து இலங்கை இராணுவம் உள்ளதாக புகார் கூறியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது என்றார்.

தமிழர் பிரச்சினையில் இந்தியா ஆக்கபூர்வமாக செயல்பட வலியுறுத்தினோம் என்று கூறிய சம்பந்தன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சி்ங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன என்றும், சிங்கள குடியேற்றங்களை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடனான சந்திப்பை தொடர்ந்து அவர்கள், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகின்றனர்.

இந்த சந்திப்புகளின் போது, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.

குறிப்பாக, 13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை அகற்றவும் இலங்கை அரசுக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க அவர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.

இதேபோன்று, போர்க்குற்றப் புகார் குறித்த ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கை மற்றும் இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாகவும் நரேந்திர மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரையும் இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.

TAGS: