சுல்தானிடம் அன்வார் மன்னிப்பு கேட்டார்

apologyமரியாதைக்குறைவாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க  வேண்டும்  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தம்  கட்சி  சார்பில்   சிலாங்கூர்  சுல்தானிடம்  இன்று  மன்னிப்பு  கேட்டார்.

சிலாங்கூர்  அரசமைப்பையும்  சுதந்திரத்திலிருந்து  கடைப்பிடிக்கப்படும்  நடைமுறையையும்தான்  பிகேஆர்  பின்பற்றியது  என்றாரவர்.

“சிலாங்கூர்  அரசமைப்பையும்  1957-இலிருந்து  கடைப்பிடிக்கப்படும்  நடைமுறையையும்  பின்பற்றும்  எங்கள்  முடிவு  சுல்தானின்  உணர்வுகளைப்  புண்படுத்தியிருந்தால்  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறோம்”, என்று  அன்வார்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.

இதற்குமுன்னர் , டிஏபி தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்கும்  இதேபோன்றதொரு  அறிக்கை  விடுத்திருந்தார்.