பிகேஆர் பெங்காலான் குபோர் தொகுதியை பாஸிடம் ஒப்படைத்தது

by elecபிகேஆர்,  செப்டம்பர்  25-இல்  நடைபெறும்  பெங்காலான்  குபோர்  இடைத்  தேர்தலில்  பாஸ்  போட்டியிட  இடமளித்து  ஒதுங்கிக்  கொள்வதென  முடிவு  செய்துள்ளது.

“அம்னோவையும் பாரிசான்  நேசனலையும்  வெற்றிகரமாக  எதிர்த்து  நிற்க  பக்கத்தான்  ரக்யாட்டில் உள்ள  நாம்  ஒன்றுபட்டிருப்பது  முக்கியம்”, என பிகேஆர்  தலைவர்  டாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.