நியு சிலாந்து கேட்டுக்கொண்டதும் ரிஸால்மன் அங்கு அனுப்பப்படுவார்

rizalநியுசிலாந்தில்  மலேசிய  தூதரகத்தில் இராணுவ  விவகார  அதிகாரியாக  பணிபுரிந்த   முகம்மட்  ரிஸால்மனை  வழக்கு விசாரணைக்காக  அந்நாட்டுக்கு  அனுப்பிவைக்க  அரசாங்கம்  தயாராக  உள்ளது  என  வெளியுறவு  அமைச்சு  கூறியது.

“நியுசிலாந்து  அரசாங்கத்தின்  அதிகாரப்பூர்வ  கோரிக்கைக்காகக்  காத்திருக்கிறோம்”,என  அமைச்சின்  பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ரிஸால்மன்  நியுசிலாந்தில்  திருட்டு, தாக்குதல்  குற்றச்சாட்டையும்  பாலியல்  வல்லுறவு குற்றச்சாட்டையும்  எதிர்நோக்கியுள்ளார்.