ஏஜி: அஸ்மிக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும்

 

Azmi charge reviewமலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டிற்கு எதிராக மக்கள் தெரிவித்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று கூறியது.

இதர தேச நிந்தனை குற்றச்சாட்டுகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) கூறினார். ஆனால் எந்த வழக்கு என்று அவர் திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை.

அந்த சட்டப் பேராசியருக்கு ஆதரவாக மலாயா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர் நடவடிக்கை தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருக்கையில் ஏஜியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

நாளை பிற்பகல் மணி 1.00 அளவில் யுஎம் மாணவர்கள் சங்கமும் யும் போதகர்கள் சங்கமும் பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்ப்பு பேரணியை நடத்த விருக்கின்றனர்.