ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன.
இந்த சிறைத்தண்டனை மற்றும் ஜெயலலிதாவின் பின்னணி, ஈழத்தமிழர் விவகாரங்களில் அவரது பங்கு குறித்து கனடாவிலிருக்கும் சிரேஸ்ட ஆய்வாளர் சுதர்மா லங்காசிறி வானொலியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
1998ம் ஆண்டு முதல்வராக இணைந்த ஒரு ஆண்டிற்குள்ளேயே இந்திய மத்திய ஆட்சியையே புரட்டிப் போட்டவர். 2014ம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் அணி வென்றிருந்தால் பிரதமராவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
18 வருடங்களிற்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் ஜெயலலிதாவைக் சிக்கலிற்குள் மாட்டிக் கொள்ளும் என்பதைத் தெரிந்திருந்தாலும், அவர் இந்த இறுதி விசாரணையின் போது விடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உண்டு என்றது அவரை ஒரு பச்சை அரசியல்வாதியாகக்காட்டியது.
எம்.ஜி.ஆர் மறைந்த போது உடன்கட்டை ஏற முயன்றதான செய்தி, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் கடை வைத்திருந்த சசிகலாவை தனது இல்லத்தில் ஒருவராக ஆக்கி வாழ்ந்து வந்தது போன்ற சர்ச்சைகள் பல இருந்தாலும் நிறையப் படித்தவர், ஆளுமை மகிக்கவராக தன்னை பல இடங்களிலும் காட்டியிருக்கிறார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eA4dwfzIyuI


























இது இறுதி தீர்பு அல்லா .இன்னும் இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன மேல் முறைyitrirku . அதலால் அம்மையாரின் எதிரிகள் கொக்கரிக்க வேண்டாம்
அங்கு ஏதும் நடக்கும். அவள் திரும்பவும் முதல் அமைச்சர் ஆக பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன
அதுவரை ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சிறந்தது
தமிழ்நாடு காவல் துறை கையால் ஆகாத தரமில்லா ஆசாமிகள். அவ்வளவு ஆர்பாட்டங்கள் அவ்வளவு தீ எரிப்பு பொது உடமைகள் சேதம்–ஆனால் அந்த மக்கள் எதிரிகளை ஒன்ற்மே செய்ய முடியவில்லை
தீர்ப்பை கேட்ட போது யெயலலிதாவிற்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாம் , தலை சுற்றியதாம் !!!
கொஞ்சம் சிறையில் இருந்து யோசிச்சுப் பாருங்கள் , பல்லாயிரக்கணக்கான தமிழ் ஈழ மக்கள் கூட்டு படுகொலை செயப்பட்ட போது , அனைத்து உண்மைகள் தெரிந்தும் , தடுக்கும் வல்லமை இருந்தும், போராடும் மக்கள் பலம் இருத்தும்.,
போர் என்றால் மக்கள் சாகத்தான் செவார்கள் என்னும் உங்கள் இரக்கமற்ற அறிக்கை கேட்டு எமக்கு எப்படி சுத்தி இருக்கும் !!!
எமக்கு தலை சுற்றவில்லை, உலகமெங்கு எவருமற்ற ஆனாதைகள் போல் தெருத்தெருவாக அவலக்குரலோடு மட்டும் செத்து விழுந்தோம்.
இன்றும் உங்களுக்காக அழுபவர்கள் தமிழர்கள் தான்.
இனியாவது தமிழன் ஆளட்டும்
உலக தமிழர் தலை விதி மாறட்டும்
திராவிடக் கட்சியாக அல்ல
தமிழரின் கட்சியாக