பாக்தாத் இராணுவ தளத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்: 300 வீரர்கள் பலி

300_killedd_001ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 300 இராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கடந்த மாதம் முதல் நடத்தி வருகிறது.

இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாக்தாத் (Baghdad) அருகே உள்ள ஈராக்கின் முக்கிய ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், அம்முகாமில் இருந்த 300 இராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் இச்சம்பவம் பாக்தாத் பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.