ஐஎஸ்ஐஎஸ் மீது குண்டுமழை பொழிந்த பிரிட்டன்! புகைப்படங்கள் வெளியானது

britain_isis_001உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது முதன்முறையாக பிரிட்டன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவரும் வேளையில், முதன் முறையாக பிரிட்டன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, தீவிரவாதிகளின் இலக்குகளை நோக்கி நேற்று சக்திவாய்ந்த குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசியது.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பல இலக்குகள் தரைமட்டமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதல்களை பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் போலன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் முதன்முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.