அம்பிகா: என்மீது தேச நிந்தனை விசாரணையா? வரவேற்கிறேன்

ambikaமலேசிய  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்   அவர்மீது  தேச  நிந்தனை விசாரணை  நடக்கலாம் என்பது  பற்றிக்  கொஞ்சம்கூட  கவலைப்பட்டவராக  தெரியவில்லை.

இன்னும்  சொல்லப்போனால்  அவர்  அதை  வரவேற்கிறார். விசாரணை  நடப்பது  நல்லதுதான்  என்று  கூறும்  அவர்  அப்போதுதான்  உண்மை  தெரிய  வரும்  என்கிறார்.

ஆனால், இப்போது  நெகாரா-கூ  அமைப்பின்  புரவலராக  உள்ள  அம்பிகா, போலீசார்  இன்னமும்  தம்மைத்  தொடர்புகொள்ளவில்லை  என்றார்.

“இதுவரை  அழைப்பு  வரவில்லை. விசாரணை  எதற்காக  என்றும்  தெரியவில்லை.

“நான்  சொன்ன  எந்தக்  கருத்து  தேச  நிந்தனை  வாய்ந்தது  என்றும்  தெரியவில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  கூறினார்.

பீரோ  டேடா  நெகரா (பிடிஎன்)  நடத்தும் பயிற்சி  வகுப்புகளைக்  குறைகூறியதற்காக  Persatuan Pertubuhan Merah Terengganu என்னும்  அமைப்பு  போலீஸ்  புகார்  செய்திருப்பதாகக் கூறப்படுவது  பற்றி  அம்பிகா  இவ்வாறு  கருத்துரைத்தார்.