எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிகழ்வு

turunநாளை  எரிபொருள்  விலை உயர்வை  நையாண்டி  செய்யும்  நிகழ்வு  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

“Satira 20 Sen: Protes Kenaikan Harga Minyak” என்ற  தலைப்பில் எரிபொருள்  விலை  உயர்வுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  அந்நிகழ்வு  சோகோ  விற்பனை வளாகத்தில்  பிற்பகல்  மணி  2.30க்கு  நடைபெறும்.

அது  ஓர்  ஒத்திகைதான்  என்றும்  அதைவிட  பெரிய  நிகழ்வு பின்னர்  ஏற்பாடு  செய்யப்படும்  என்றும்  விலை- உயர்வு  எதிர்ப்பு  இயக்கமான  துருன்  தலைவர்  முகம்மட்  அஸான்  சபார்  கூறினார்.

அப்பெரிய  நிகழ்வு நடைபெறும்  நாள்,  இடம்  முதலியவை  இன்னும்  முடிவு  செய்யப்படவில்லை  என்பதால்  அதைப்  பற்றி  அவரால்  அதிகம்  விவரிக்க  முடியவில்லை.