மனித வெடிகுண்டுகளாய் மாற ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் புதிய யுக்தி

ebola_isis_001ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எபோலா வைரஸை தங்களுக்குள் ஏற்று, மேற்கத்திய நாடுகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் அமெரிக்காவுக்கு சென்ற இடத்தில் எபோலா காய்ச்சலுக்கு லைபீரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று எபோலா வைரஸ் நிறைந்த ரத்தத்தை தங்கள் உடலில் செலுத்தி அதன் பிறகு மேற்கத்திய நாடுகளில் அவர்கள் அதை பரப்ப திட்டமிட்டுள்ளதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹம் பல்கலைக்கழகத்தின் (University of Buckingham) பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு துறையின் தலைவர் அண்டணி கிளீஸ் (Antony Gleece) கூறுகையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எபோலா வைரஸை தங்களுக்கு சாதகமாக்க பயன்படுத்தவுள்ளனர் என்றும் தற்கொலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் இருப்பதால் அவர்களுக்கு எபோலா உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.