முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு உதவி – யாழில் இந்தியத் தூதர்!

y_k_sinha_இலங்­கைக்கு முன்­னு­ரி­மையின் அடிப்­ப­டையில் இந்­திய அர­சாங்கம் எதிர்காலத்­திலும் தொடர்ந்து உத­வி­களை வழங்கும். யாழ்­தேவி ரயில் சேவை இன்று (நேற்று) ஆரம்­பிக்­கப்­ப­டு­வது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என்று இந்­திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­திற்­கான யாழ்­தேவி ரயில் சேவை நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வினால் பளை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இதன் போது பளை ரயில் நிலை­யத்தில் வைத்து யாழ்­தேவி ரயி­லுக்குள் பிர­வேசித்த இந்­திய உயர் ஸ்தானிகர் கேச­ரிக்கு மேற்­கண்ட தக­வலை தெரி­வித்தார்.

உயர்ஸ்­தா­னிகர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யாழ்ப்­பா­ணம் ­கொ­ழும்பு யாழ்­தேவி ரயில் சேவை இன்று (நேற்று) முதல் ஆரம்­பிக்­கப்­ப­டு­வது பெரு மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும். இந்த சேவையை ஆரம்­பிக்க பங்­க­ளிப்புச் செய்த நாடு என்­ற­ வ­கையில் இந்­தியா மட்­டில்லா மகிழ்ச்­சி­ய­டை­கின்­றது. இதே­நே­ரத்தில் இப்­ப­ணியை மேற்­கொள்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய இலங்கை அர­சுக்கும், இந்­தி­யாவின் ‘இர்கொன் ‘ நிறு­வ­னத்­திற்கும் நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

உண்­மையில் இந்­தியா இந்த ரயில் பாதையை அமைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் பாரிய ஒத்­து­ழைப்பை வழங்கியது. அதற்­காக இலங்கை ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ மற்றும் அரச நிறு­வ­னங்­களின் அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருக்கும் மீண்­டு­மொ­ரு­முறை நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்கின்றேன்.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்து வருகிறது. எதிர் காலத்திலும் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு உதவி செய்யும் எனவும் கூறினார்.

TAGS: