பொதுத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதாக்கும் பக்கத்தான் முயற்சி தோல்வி

inkஅழியா  மை குளறுபடிகளால்  13வது  பொதுத்  தேர்தல்  முடிவுகளைச் செல்லாதென  அறிவிக்கக்  கோரி  பக்கத்தான்  செய்திருந்த  மனுவை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது.

அந்நீதிமன்றத்தின்  மூன்று  நீதிபதிகளில்  இருவர்,  அக்கோரிக்கை  ஒரு  தேர்தல்  மனுவாக  தேர்தல்  நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட  வேண்டியது  எனக்  கூறினர்.

எனவே, தேர்தல்  வழக்கான  அதை  விசாரிக்கும்  அதிகாரம்  சிவில்  நீதிமன்றத்துக்கு  இல்லை  அது  தீர்ப்பளித்தது.