நஜிப்பை இந்து குருக்கள்போல் காண்பிக்கும் படம் குறித்து போலீசில் புகார்

priestமுகநூலில், பிரதமர்  நஜிப்  அவ்துல்  ரசாக்கை  ஓர்  இந்து  குருக்கள்போல்  காண்பிக்கும்  படம்  போடப்பட்டிருப்பதைக்  கண்டு சினமடைந்துள்ளது  மலாய்  உரிமைக்காக  போராடும்  என்ஜிஓ-வான  மர்டாபாட்  ஜலினான்  முஹிப்பா  மலேசியா (எம்ஜேஎம்எம்).

‘பொலேலாந்த்’ முகநூல் பக்கத்தில்  பதிவிடப்பட்டுள்ள  அப்படம் பற்றி  எம்ஜேஎம்எம்  நேற்று  போலீசில்  புகார்  செய்தது.

அப்படத்தில்  நஜிப்பின்  முகத்தை  இந்து குருக்களின்  உடலில் பொருத்தி  இருக்கிறார்கள்.

படத்தில்  உள்ள  வாசகம் முஸ்லிம்களை  இந்து  மதத்தில்  சேரச்  சொல்கிறது. அதுதான் நஜிப்புடைய  முன்னோர்களின்  மதமாம்.

இதை  நாட்டின்  தலைவரை  இழிவுபடுத்தும்  செயல்  என்று  சாடிய  எம்ஜேஎம்எம்  தலைவர்  அப்துல்  ரானி  குலுப்  அப்துல்லா,  போலீஸ்  உடனடியாக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார்.