பினாங்கில் ‘கொலைகார’வீடு கண்டுபிடிக்கப்பட்டது: இருவர் கைது

polisஅண்மைய  மாதங்களாக  தொடர்  கொலைகளால்  பினாங்கே  அதிர்ந்து போயிருந்தது.   ஆங்காங்கே வெட்டப்பட்ட   உடலுறுப்புகளும்  தலையில்லா  முண்டங்களும் கண்டெடுக்கப்பட்டது  பெரும்  பீதியை  உருவாக்கியிருந்தது..

இப்போது  போலீசார்  புக்கிட்  மெர்தாஜமில் ஒரு  கம்பத்தில்  கொலை  செய்யப்  பயன்படுத்தப்பட்டு  வந்துள்ள  ஒரு வீட்டைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த  வீட்டில்தான்  மியான்மார் நாட்டைச்  சேர்ந்த  பலர்  கொல்லப்பட்டிருக்கலாம்  என  நம்பப்படுகிறது.

இதன்  தொடர்பில்  இருவர்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்கள்  என  மாநில  போலீஸ்  தலைவர்   அப்துல்  ரகிம்  ஹனாபி  கூறியதாக  டிவிட்டர்  செய்திகள்  தெரிவிக்கின்றன.

ஆகக்  கடைசியாக, நவம்பர்  24-இல்,  ஒரு  காப்பிக்கடைக்கு  அருகில்  வெட்டப்பட்ட  தலை  மட்டும்  கண்டெடுக்கப்பட்டது. வெளிநாட்டைச்  சேர்ந்த ஒருவரின்  தலை  என்று  நம்பப்படும்  அது  விரிக்கப்பட்ட  ஒரு  குடைக்கு  அடியில்  பிளாஸ்டிக்  பையில்  வைக்கப்பட்டிருந்தது.

அது  கண்டெடுக்கப்பட்டது  நேப்பாளம்,  மியான்மார்  இந்தோனேசியா  ஆகிய  நாடுகளைச்  சேர்ந்த  தொழிலாளர்கள்  அதிகம்  வாழும் ஒரு பகுதியாகும்.