‘தெரிந்த பிசாசு’ ராஜபக்சேவை ஓட ஓட “வாக்குகளால்” விரட்டியடித்த ஈழத் தமிழர்கள்!!

rajapaksaயாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால ஸ்ரீசேன மிக மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்த மகிந்த ராஜபக்சே, தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசாகிய என்னையே தேர்ந்தெடுங்கள் என்று கெஞ்சிப் பார்த்து தமிழில் வாக்கு கேட்டார்.

ஆனால் தமிழ் மக்கள் ராஜபக்சேவை முற்று முழுதாக நிராகரித்து விட்டனர். ‘தெரிந்த பிசாசு’ ராஜபக்சேவை ஓட ஓட மேலும் அதிபர் தேர்தலில் மைத்ரிபால ஸ்ரீசேனவையே ஆதரிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன.

இதனை ஏற்று தமிழர்களும் வாக்களித்துள்ளனர். ராஜபக்சேவை விட பல மடங்கு வாக்குகளை தமிழர் பகுதிகளில் மைத்ரிபால அள்ளியுள்ளார்.

தமிழர் வாழும் பகுதிகளில் மைத்ரிபால, ராஜபக்சே பெற்ற வாக்குகள் விவரம்

தொகுதி மைத்ரிபால ராஜபக்சே

யாழ்.       17,994           4,502

சாவகச்சேரி 23,520   5,599

மானிப்பாய் 26,958    7,225

நல்லூர்      24,929;      5,405

காங்கேசன் துறை 18,729     5,705

ஊர்க்காவற்றுறை 8,144      5,959

கிளிநொச்சி    38, 856      13,300

கோப்பாய்   27,161          6,211

பருத்தித்துறை  17,388       4,213

உடுப்பிட்டி          18,317       3,937

வட்டுக்கோட்டை   20,873    7,791

வன்னி மாவட்டம் முல்லைத் தீவு   –    35,441      7,935

வவுனியா – 55, 683            16,678

திருகோணமலை மூதூர் 57,352         7,132

சேருவில    24,733            26,716

திருகோணமலை     49,659        12,056

tamil.oneindia.com

TAGS: