பாரிசில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்: 3 பேர் சிறைப்பிடிப்பு

paris_hostage_001பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அஞ்சல் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மூன்று பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரிசின் வடமேற்கு பகுதியில் உள்ள கொலம்பஸ் பகுதியில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர், 3 பேரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுடன் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com