கோபிந்த் சிங்: அல்தான்துயா கொலை பற்றி நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும்

 

Altantuyamppmஅல்தான்துயா கொலை செய்யப்படுவதற்கான நோக்கம் என்ன என்பது தெரியாதிருக்கும் நிலையில் அப்பிரச்சனைக்கான காரணம் குறித்து பிரதமர் நஜி ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பிரதமர் இப்போது நடவடிக்கையில் இறங்கி நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன்.

“இம்மாதிரியான சூழ் நிலையில் எந்த ஒரு விவேகமுள்ள பிரதமரும் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. அவராகவே முன்வந்து பதில்களைக் கோர வேண்டும் என்பதோடு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“அல்தான்துயாவை கொலை செய்வதற்கு உத்தரவிட்டது யார், ஏன் என்பது குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கும் கடப்பாடு அவருக்கு உண்டு”, என்று கோபிந்த் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.