கண்ணில் படும் ஜப்பானியர்களை அனைவரையும் கொன்று ரத்தத்தை குடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜப்பான் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கைகளை ஜப்பான் அரசு நிறைவேற்றாத நிலையில் தன்னிடம் பிணையக்கைதியாக இருந்த ஊடகவியலாளர் கெஞ்சி கோட்டோவை(Kenji Goto) நேற்று தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.
அந்த கொடூரக் காட்சியின் வீடியோவில் தோன்றிய ஜிஹாதி ஜான்(Jihadi John) பேசியதாவது, ‘ அபே(Shinzo Abe) உன்னுடைய இந்த பொறுப்பற்ற முடிவால், இந்த கத்தி கெஞ்சியின் தலையை மட்டும் வெட்டாது.
எங்கள் கண்ணில் படும் ஜப்பானியர்கள் ஒவ்வொருவரையும் கொன்று அவர்களின் ரத்தத்தால் எங்கள் தாகத்தை தணிப்போம். இனி ஜப்பானிற்கு இருண்டகாலம் தொடங்கிவிட்டது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான்.
இந்த கொடூர தாக்குதலை கண்டித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜப்பான் அரசு தீவிரவாத்திற்கு எப்போதும் வளைந்து கொடுக்காது என பதிலளித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் உள்ள ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது மகனின் மரண செய்தியை கேட்ட கெஞ்சி கோட்டோவின் தாய் Junko Ishido மிகவும் மனமுடைந்து வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளேன் என கண்ணீர் மல்க கதறியுள்ளார்.
மேலும் தனது மகனின் அன்பையும், தைரியத்தையும் ஜப்பானிய மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்நிலையில் கெஞ்சி கோட்டோவின் கொலைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com


























ஜப்பானியர்களின் இரத்ததிற்கு ஹலால் முத்திரை கிடைத்து விட்டதா? .அதை பொய் குடிக்க போகிறதா சொல்கிறார்கள்.
இவன்களுக்கு உச்சந்தலையில் கேடுக்காலம் உற்காந்து சமயம் பார்க்குது .
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ஒரு காலத்தில் ஜப்பானியர்கள் பலரின் தலையை துண்டித்தார்கள் அட்டுழியம் செய்தார்கள் இன்று தனக்கு நடக்கும் போது குத்துது குடையுது
புனித நூலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்! அது பாபமில்லையாம்!
அட..மட…அவர்களின் ரத்தத்தைக் குடித்தால் என்ன வரும்? ஒன்னும் இல்லை…ஆனா அவர்களின் _த்திரத்தை கொஞ்சம் கேட்டு (அவர்கள் கொடுத்தால்) வாங்கிப் பருகினால் நிச்சயம் அறிவு வரும்,
ஜோர்டானிய விமானியை கொன்றால், ஜோர்டான் சிறையிலிருக்கும் ISIS தீவரவாதி கைதிகளை தூக்கிலிடுவோம் என்று கர்ஜித்த ஜோர்டானிய அரசு வெறுமனே இருப்பதை பார்த்தால், இவர்களும் நமது மலேசிய அரசாங்கத்தைபோல் “வாய்சொல் வீரர்கள்”-தானா ?
இரத்தம் குடிக்கும் ரத்தக்கட்டேரிகளுக்கு ஏழரை பிடித்துக்கொண்டது வினையை விலை கொடுத்து வாங்கிக்கொண்டது அதன் விளைவு வேகுத்துர்ராம் இல்லை!
மன்னிக்கவும்.
ஜோர்டானிய அரசு மலேசிய அரசாங்கத்தைபோல்
“வாய்சொல் வீரர்கள்” அல்ல என்பதை நிருபித்து உள்ளது.
ISIS தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய முதல் நாடு என்ற பெருமையை தட்டி சென்றது ஜோர்டானிய அரசு.