சூடுபிடிக்கும் தாக்குதல்: 109 தீவிரவாதிகளை கொன்று குவித்த ராணுவம்

109_killed_001நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 109 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவில் தனி நாடு கோரி கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல குண்டுவெடிப்புகளையும், தற்கொலைப் படை தாக்குதலையும் நிகழ்த்தி பலரை பலியாகியுள்ளனர்.

இதுமட்டுமின்றி தங்களது அண்டை நாடான கேமரூனிலும் , தீவிரவாதிகள் தங்களது அட்டூழியங்களை நடத்த தொடங்கியதால் நைஜீரிய ராணுவத்துடன் இணைந்து கேமரூன் நாட்டின் ராணுவமும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் நைஜீரிய எல்லைப்பகுதியை ஒட்டி உள்ள போர்னோ (Borno) மற்றும் டிப்பா (Diffa)பகுதியில் கடந்த 6ம் திகதி தீவிரவாதிகளுடன் இரு நாட்டு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 109 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 4 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-http://world.lankasri.com