பிகேஆர்: அன்வார்-ஆதரவு ஆர்ப்பாட்டம் பற்றி அறியோம்

pro anwarவார  இறுதியில், அன்வார்  இப்ராகிமின்  ஆதரவாளர்கள்  சோகோ, டட்டாரான்  மெர்டேகா  வட்டாரத்தில்  ஒன்றுதிரண்டு  அவர்  சிறையிடப்பட்டதை  எதிர்த்து பேரணி  நடத்தப்போவதாக  தகவல்   கிடைத்திருக்கிறது  என  போலீசார்  கூறுகிறார்கள்.

எப்படிப்பட்ட  பேரணியையும்  சமாளிக்க  போலீஸ்  ஆயத்தமாக  உள்ளது  என  போலீஸ்  படை துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  குறிப்பிட்டதாக   த   சன்  நாளேடு  கூறியது.

“பேரணி  நடந்தால்  அது  சட்டப்படியாகவும்  அமைதியாகவும்  ஒழுங்காகவும்  நடப்பதை  உறுதிப்படுத்துவது  எங்கள்  பொறுப்பு”, என்றாரவர்.

ஆனால்,  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  இதைப்  பற்றி  தமக்கு  எதுவும்  தெரியாது  என மலேசியாகினியிடம்  தெரிவித்தார். தமக்குத்  தெரிந்த இயக்கம் “விடுதலை  நோக்கி  நெடும்பயணம்”  என்னும்  இயக்கம்  மட்டுமே  என்றாரவர்.

என்றாலும்  அன்வாரின்  ஆதரவாளர்கள்  அவர்களாகவே  அப்படியொரு  பேரணியை  ஏற்பாடு  செய்யும்  சாத்தியத்தை  அவர்  மறுக்கவில்லை.