எம்பி: அன்வார் அரச மன்னிப்பை நாட மாட்டார்

pardonதம்மீது  சுமத்தப்பட்டது  ஒரு  பொய்யான  குற்றச்சாட்டு  என்று  அன்வார்  இப்ராகிம்  கூறிக்கொண்டிருப்பதால்  அவர்  அரச  மன்னிப்பை  நாட  மாட்டார்  என்கிறார் பாஸ்  எம்பி  காலிட்  சமட்.

இது  தம்முடைய  தனிப்பட்ட  கருத்து  என்றும்  அவர்  சொன்னார்.

“அன்வார்  அதற்கு மனுச்  செய்ய  மாட்டார்  என்றே  நம்புகிறேன் அப்படிச்  செய்வது  குற்றத்தை  ஒப்புக்கொள்வது  போலாகும்”, என  அந்த  ஷா ஆலம்  எம்பி கூறினார்.

முதலாவது  குதப்புணர்ச்சி  வழக்கில்  சிறைக்கு  அனுப்பப்பட்டபோதுகூட  அன்வார்  அரச மன்னிப்பை  நாடவில்லை.