கேலிச்சித்திரக்காரர் ஸுனார் போலீஸ் பிணையில் விடுதலை

bailதேச  நிந்தனைக்காக  விசாரணையை  எதிர்நோக்கியுள்ள  அரசியல்  கேலிச்சித்திரக்காரர்  ஸுனார்  போலீஸ்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரின்  வழக்குரைஞர்களில்  ஒருவரான  மெலிஸ்ஸா  சசிதரன், காலை  மணி 10.40க்கு  மலேசியாகினியிடம்  இதை  உறுதிப்படுத்தினார்.

“டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்திலிருந்து  போலீஸ்  பிணையில்  சற்று  நேரத்துக்குமுன்னர்தான்  அவர்  விடுவிக்கப்பட்டார்”, என்றாரவர்.

ஸுனார்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு II-இல் அவரைத்  தண்டித்த  கூட்டரசு  நீதிபதிகளைக்  கேலி  செய்து  டிவிட்டரில்  பதிவிட்டதற்காக புதன்கிழமை  கைது  செய்யப்பட்டார்.

நீதிபதிகளைக் “கருப்பு அங்கி  அணிந்த  ஏவலர்கள்”  என்றவர்  கிண்டல்  செய்திருந்தார்.