கிடெக்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டது

kidexசிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி கின்ராரா- டமன்சாரா   விரைவுச்  சாலைத்  திட்டத்துக்கு  முற்றுப்புள்ளி  வைத்தார்.

கிடெக்ஸ்  திட்டத்துக்கான  குத்தகையைப்  பெற்ற  நிறுவனம்  மாநில  அரசு  விதித்த  மூன்று  நிபந்தனைகளை  நிறைவேற்றத்  தவறிவிட்டதாக  அஸ்மின்  இன்று  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய  போக்குவரத்து  தாக்கம்  சமூகத்  தாக்கம், சுற்றுச்சூழல்  தாக்கம்  மீதான  சுயேச்சை  மதிப்பீட்டை வழங்க வேண்டும்.
சாலையைப்  பராமரிக்கும்  காலத்தில்  வசூலிக்கப்படும்  சாலைக்  கட்டணம், சாலைக்  கட்டணத்தின்வழி  கிடைக்கும்  மொத்த  வருமானம், முதலீட்டுக்குக்  கிடைக்கும் இலாப  விகிதம்  ஆகியவற்றைத்  தெரிவிக்க  வேண்டும்.
திட்டம்  மீதான  ஒப்பந்தத்தைப்  பகிரங்கப்படுத்த  வேண்டும்..

பிப்ரவரி  14-க்கு  முன்னர்  இம்மூன்று  நிபந்தனைகளையும்  நிறைவேற்ற  வேண்டும்  என  நிறுவனத்திடம்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

“எந்த  நிபந்தனையையும்  கிடெக்ஸ்  நிறைவேற்றவில்லை  என்பதால், அத்திட்டம்  இரத்தாவதாக  சிலாங்கூர்  அரசு  அறிவிக்கிறது”, என  அஸ்மின்  கூறினார்.