1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி! கொன்று குவித்த அமெரிக்கா

1465_killed_001சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் 1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஐ.எஸ்.தீவிரவாதிகள், அல்கொய்தா மற்றும் அல்– நுஸ்ரா முன்னணியை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 1600 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர்.

தற்போது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மட்டும் 1465 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவும், பிரித்தானிய கண்காணிப்பு குழுவும் உறுதி செய்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் பலியானோரில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தவிர அல்– நுஸ்ரா முன்னணியை சேர்ந்த 73 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com