வான் அசிசா: அன்வாரின் தியாகம் வீணாகப் போய்விடக் கூடாது

wanஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  வகையில்  இன்று  கோலாலும்பூரில்  நடைபெறும்  கித்தா  லவான்  பேரணிக்கு  மக்கள்  திரண்டு  வர  வேண்டும்  என  பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  கேட்டுக்  கொண்டார்.

“அனவார்  நாட்டின்  மேம்பாட்டுக்காக  தன்னையே  தியாகம்  செய்து  கொண்டிருக்கிறார். இப்போது  அவர்  சிறையில்  அடைபட்டிருக்கிறார். நாம் செய்ய  வேண்டியது  என்ன?  அவருக்குப்  பக்கபலமாக  நின்று  அவருடைய தியாகம்  வீணல்ல  என்பதைக்  காண்பிக்க  வேண்டும்”. இன்று  எம்பிபிஜே  சிவிக்  மண்டபத்தில்  150 பேரடங்கிய  கூட்டத்தில்  பேசியபோது  வான்  அசிசா  இவ்வாறு  கேட்டுக்கொண்டார்.